தந்தை சைக்கிள் ரிக்க்ஷா ஓட்டுநர்...! மகன் ஐஏஎஸ் அதிகாரி..!
வறுமைதான்
என் வைராக்கியத்தை உறுதிப்படுத்தியது..!
படிப்பறிவும்
பொருளாதாரப் பின்புலமும் இல்லாத நாராயண், வாரணாசியில்
சைக்கிள் ரிக்ஷா ஓட்டுநர். இவருக்கு
மூன்று பிள்ளைகள். சாப்பாட்டுக்கே சிரமமான நிலைமை. இந்த
வறுமையான சூழ்நிலையிலும் தன் மகன் கோவிந்த்
ஜெய்ஸ்வாலை ஐஏஎஸ் படிக்க வைத்துள்ளார்.
இன்று கோவிந்த் உதவி ஆட்சியர்.
தான் படிக்காவிட்டாலும் கல்வியின் முக்கியத்துவம் அறிந்த நாராயண், தன்
சிரமமான பொருளாதார நிலைமையிலும் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பி படிக்க வைத்துள்ளார்.
அதில் இளைய மகனான கோவிந்த்
ஜெய்ஸ்வால்தான் இப்போது ஐஏஎஸ் அதிகாரி.
நெருக்கடி
மிகுந்த வாரணாசி பகுதியில் 12 x 8 என்ற
அளவுகொண்ட ஒரு சிறிய அறைதான்
கோவிந்தின் வாடகை வீடு. அந்தச்
சிறிய அறையில்தான் கோவிந்தின் படிப்பு, வீட்டின் சமையல், துணிகளைத் துவைத்தல்
மற்றும் குடும்பத்திலுள்ள அனைவரின் இரவு நேர உறக்கமும்.
வறுமை ஒருபுறம் வளர்ந்து கொண்டிருக்க, கூடவே கோவிந்தின் ஐஏஎஸ்
கனவும் வளர்ந்திருக்கிறது. வீட்டைச் சுற்றியுள்ள மின்தறி சத்தங்கள், தொழிற்சாலைகளின்
புகை, பதினான்கு மணி நேரம் மின்வெட்டு
எனப் பல்வேறு பிரச்சினைகள் அவரது
கனவுக்கு முட்டுக்கட்டை போட்டாலும் அவற்றை வென்று, கனவைக்
கைப்பற்றியிருக்கிறார் கோவிந்த்.
சிறு வயதில் மற்ற பிள்ளைகளைப்
போல வீதியில் விளையாடுவது, நண்பர்களுடன் அரட்டை என எதுவும்
இல்லாமல் படிப்பதில் மட்டுமே கண்ணும் கருத்துமாக
இருந்திருக்கிறார். இதனால், மற்ற மாணவர்கள்
கோவிந்தை கூச்ச சுபாவம் மிக்க
மாணவராவே கருதினர். ஆனால், உண்மையில் கோவிந்த்
தனது லட்சியத்துக்காக தனது சிறு வயது
பால்ய சந்தோஷங்களை தியாகம் செய்துள்ளார் என்பதே
உண்மை.
கணக்குப்
பாடத்தில் வல்லவரான கோவிந்த், எட்டாம் வகுப்பு படிக்கும்போதே
மற்ற ஒன்பதாவது, பத்தாவது படிக்கும் மாணவர்களுக்கும் மாலை வேளையில் டியூஷன்
சொல்லிக் கொடுத்து அதில்வரும் வருமானத்தில் தன் அக்காக்களுக்கும், குடும்பத்திற்கும்
உதவிகரமாக இருந்துள்ளார். பள்ளியில் அவர்தான் முதல் மாணவர். பின்பு
பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தில் தனது
கல்லூரிப்
படிப்பினை முடித்து, ஐஏஎஸ் தேர்வுக்காக தயாராகிக்
கொண்டிருந்தார். மேலும், தனது ஐஏஎஸ்
தேர்வுப் பயிற்சிக்காக டெல்லிக்குச் செல்ல திட்டமிட்டிருந்தார் கோவிந்த்.
அந்த நேரத்தில் துரதிர்ஷ்டவசமாக கோவிந்தின் தந்தைக்கு காலில் அடிபட்டு படுக்கையில்
முடங்கினார். ஒரு பக்கம் தன்
கனவு, இன்னொரு பக்கம் தந்தையின்
உடல் நிலை என இறுக்கமான
சூழ்நிலையில் இருந்த கோவிந்திற்கு அவரது
தந்தை நாராயண் நம்பிக்கை அளித்து,
டெல்லிக்குச் சென்று படிக்க, மகள்களின்
திருமணத்திற்காக வாங்கிய இடத்தினை 30,000 ரூபாய்க்கு
விற்று, கோவிந்தை டெல்லிக்கு அனுப்பி வைத்துள்ளார்.
தன் குடும்பத்தின் வறுமை நிலையை எண்ணி
கடுமையாகப் படித்த கோவிந்த், 2006ம்
ஆண்டு நடந்த ஐஏஎஸ் தேர்வில்
வெற்றி பெற்றார். மேலும் இரண்டு வருட
ஐஏஎஸ் பயிற்சியில் தனக்குக் கிடைத்த உதவித்தொகையை அடிபட்ட
தந்தையின் மருத்துவச் செலவிற்காக அனுப்பியுள்ளார் கோவிந்த்.
வெற்றிபெற்ற
அனுபவத்தை கோவிந்த் கூறும்போது, "சிறு வயதில் பகல்
நேரத்தில் தொழிற்சாலைகளின் சத்தத்தில் நான் கணக்குப் பாடங்களின்
சூத்திரங்களை மட்டுமே போட்டுப் பார்ப்பேன்.
ஏனென்றால், அந்தச் சத்தத்தில் மற்ற
பாடங்கள் சரியான முறையில் மனதில்
ஏறாது. சத்தங்கள் மாலை நேரங்களில் குறைந்ததும்
மற்ற பாடங்களைப் படிப்பேன். அப்துல் கலாம் தான்
என்னுடைய ஹீரோ. என்னுடைய ஐஏஎஸ்
கனவு நிஜமாக என்னுடன் இருந்து
நம்பிக்கையூட்டியது அவர் எழுதிய, ‘அக்னி
சிறகுகள்’ புத்தகம். மேலும் என்னை எப்போதும்
ஊக்கப்படுத்தி உற்சாகம் அளித்த சகோதரிகளுக்கும், என்
கனவின் மேல் நம்பிக்கை வைத்து
என்னை டெல்லிக்கு அனுப்பி வைத்த என்
தந்தைக்கும் மனம் நெகிழ்ந்த நன்றியைக்
கூறுகிறேன். என்னுடைய சிறுவயது நாட்கள் கஷ்டமானவையாக இல்லாமல்
போயிருந்தால் நான் ஐஏஎஸ் ஆகியிருக்க
வாய்ப்பில்லை. அந்த வறுமையும் கஷ்டங்களும்தான்
என் வைராக்கியத்தை அதிகப்படுத்தி, பொறுப்புடன் படிக்க காரணமானது" என்கிறார்
கோவிந்த்.
ஐஏஎஸ் பிரதானத் தேர்வில் கணக்கினைத் தவிர்த்து விட்டு தத்துவம், வரலாற்றுப்
பாடங்களைப் பிரதானமாகத் தேர்ந்தெடுத்து எழுதியிருக்கிறார் கோவிந்த். "உலகில் எல்லாப் பாடங்களும்
எளிதில் படிக்கக் கூடியவைதான். ஆனால், அதில் நாம்
எவ்வளவு தூரம் ஆழமாக கற்றுக்
கொள்கிறோம் என்பதே முக்கியம்" என்கிறார்.
ஐஏஎஸ் தேர்வில் அனைத்துப் பாடங்களையும் தாய்மொழி ஹிந்தியிலேயே எழுதியிருக்கிறார் இவர். "தாய்மொழியில் தேர்வு எழுதுவது பிரச்சினை
கிடையாது. நாம் கற்றதை தெளிவான
முறையில் எப்படித் தேர்வில் வெளிப்படுத்துகிறோம் என்பதுதான் முக்கியம். இத்துடன் தளராத நம்பிக்கையும் இருந்தால்
எந்தத் தடையையும் உங்களால் வெல்ல முடியும்" என்று
சொல்லும் கோவிந்த் ஜெய்ஸ்வால், இப்போது நாகாலாந்து மாநிலத்திலுள்ள
சூன்ஹிபோடோ (zunheboto) என்ற மாவட்டத்தில் உதவி
ஆட்சியராகப் பணிபுரிகிறார்.
பங்குச் சந்தையில் ஏன் பெரும்பாலோனோர் நஷ்டம் அடைகிறார்கள்? லாபம் பெற வழிகள்.
பதிலளிநீக்கு1. தினசரி வணிகம் (intra day trade ) மட்டுமே செய்வதால்.
நாம் எவ்வளவு தான் முன் ஜாக்கிரதையாக வர்த்தகம் செய்தாலும், தினசரி வணிகம் என்பது நிச்சயமாக பணத்தை இழக்கும் காரணிகளில் மிக மிக முக்கியமான ஒன்றாகும். பங்குச் சந்தைக்கு ஊக வணிகம் என்ற பெயரும் உண்டு. ஊகம் என்றால் வரலாம் அல்லது வராமல் போகலாம் என்பதில் ஒன்று தான் பதிலாக இருக்க முடியும். உதாரணமாக இன்று மழை வருமா? சிலர் வரும் என்போம், சிலர் வராது என்போம். ஆனால் முடிவு ஏதாவது ஒன்று தான் இருக்கும். இது தான் ஊகம். இன்று மழை வரும் என்று உங்கள் நண்பரிடம் பெட் கட்டுகிறீர்கள், இந்த வருடத்திற்குள் கட்டாயம் மழை வரும் என்று பெட் இரண்டில் எது நடக்க வாய்ப்பு அதிகம். நான் சொல்ல வருவது என்ன வென்றால் பங்குச் சந்தையில் பணம் பண்ணும் அணைத்து நபர்களும், நிறுவனங்களும் ஒருபோதும் தினசரி வணிகம் மட்டும் செய்வது இல்லை. நீங்கள் தினசரி வர்த்தகம் மட்டுமே செய்வபராக இருந்தால் உங்கள் பணத்தை இன்று வேண்டுமானால் இல்லாமல் இருக்கலாம், ஆனால் என்றோ ஒரு நாள் கட்டாயம் இழப்பது உறுதி.
2. ஒரே துறை - ஒரே தரம் முதலீடு.
நீங்கள் வட்டிக்குப் பணம் தரும் தொழில் செய்ய முடிவு செய்து உள்ளீர்கள் என்று வைத்துக் கொள்வோம். ஒரு லட்சம் ரூபாய் வட்டிக்கு கொடுக்க முடிவு செய்கிறீர்கள். ஒரு லட்சம் ரூபாயினை ஒரே நபருக்கு கொடுப்பதற்கும், பத்தாயிரம் வீதம் பத்து நபர்களுக்குக் கொடுப்பதற்கும் உள்ள வித்தியாசம் தான் ஒரே துறை முதலீடு என்பது. ஒரே தரம் முதலீடு என்பது நூறு ரூபாய் விலையில் பத்தாயிரம் ரூபாய்க்கு மொத்தமாக வாங்குவது. எந்த ஒரு வெற்றிகரமான முதலீட்டாளர், மீச்சுவல் பண்டு நிறுவனங்கள் ஒரு வருடம் ஒரு தரம் மட்டும் முதலீடு செய்து விட்டு, அடுத்த வருடம் விலை குறைந்தாலும் வாங்காமல் இருப்பது இல்லை. மொத்தத்தில் லாபம் வருமே ஒலிய, வாங்குகின்ற அனைத்தும் லாபமாக ஒருவருக்கும் நடந்ததும் இல்லை, நடக்கப் போவதும் இல்லை. மார்க்கெட் திடீர் சரிவுகளை சந்திக்கும் பொழுது ஒரு சில துறை பங்கு கீழே செல்லும் பொழுது, சில துறைப் பங்குகள் கட்டாயம் மேலே செல்லும். கடந்த வருடம் வங்கிப் பங்குகள் நன்கு கீழே சென்ற அதே நேரம், தகவல் தொழில் நுட்பம், மருந்துத் துறைப் பங்குகள் நல்ல உச்சத்திற்கு சென்று உள்ளன.
நீங்கள் ஒரு பண்ணை அமைக்க முடிவு செய்து கோழி மட்டும் வளர்பதற்கும், கொஞ்சம் கோழி, சில ஆடுகள், மாடுகள், நாட்டுக் கோழி, வான் கோழி இப்படி வளர்த்தல் லாபமும் அதிகம், கோழிக்கு நோய் வந்து கோழி ஒருவேளை இறந்தால் ஆடுகள், மாடுகள், வான் கோழி அந்த நஷ்டத்தை ஈடு செய்யும். அது மட்டும் இன்றி ஒவ்வொரு கால கட்டத்தில் ஒவ்வொன்றும் பலன் தரும். சில குறுகிய காலப் பலன், சில நடுத்தர காலப் பலன், சில நீண்ட காலப் பலன் அதே சமயம் பெரிய லாபம்.
3. ஊகம் முடிவில் சோகம்.
உங்கள் ஊருக்கு அருகில் பெரிய தொழிற்சாலை, அல்லது மருத்துவக் கல்லூரி வரப் போகிறது என்ற செய்தி வந்ததும், சந்தை விலையினை விட அதிகம் கொடுத்து இடம் வாங்கி வைத்துக் கொள்வது போல் தான் ஊக வணிகம் என்பது. வந்தால் கொள்ளை லாபம், ஒரு வேளை வராவிட்டால் உங்கள் நிலைமை அதோ கதிதான். அது போல்தான் பங்கிலும் விரட்டி விரட்டி வாங்குவது என்பதும். இன்று ஒரு லட்சம் சந்தை மதிப்புள்ள இடத்தினை தொழிற்சாலை வரும் என நம்பி ஐந்து லட்சம் கொடுத்து வாங்குவதற்கும், ஒரு லட்சம் மதிப்புள்ள இடத்தை பேரம் பேசி 50000 அல்லது 75000 குறைத்து வாங்கு வதற்கும் உள்ள வித்தியாசம் தான் pe ratio பார்த்து ஒரு பங்கினை வாங்குவதும். தொழிற்சாலை வந்தாலும் நல்ல லாபம், வராவிட்டாலும் ஒரு லட்சம் சந்தை விலைக்கு விற்றால் கூட லாபம் தான், கட்டாயம் சந்தை விலைக்கு விற்கவும் இயலும். ஆனால் ஐந்து லட்சம் கொடுத்து வாங்கிய இடத்தை தொழிற்சாலை வராவிட்டால் ஐந்து லட்சம் வர பல ஆண்டுகள் கட்டாயம் ஆகலாம், சில நேரம் சந்தை விலை ஐந்து லட்சம் வராமல் கூடப் போகும் அபாயம் உண்டு.
பங்குச் சந்தை பற்றிய மாறாத உண்மைகள்:
http://atozforexdetails.blogspot.in/2014/03/blog-post.html