பேஸ்புக்கில் படித்தது- மருத்துவத்தில் சிறந்தது சுக்கு ....
சுக்குடன்
சிறிது பால் சேர்த்து, மைய்யாக
அரைத்து, நன்கு சூடாக்கி, இளஞ்சூடான
பதத்திற்கு ஆறினதும், வலியுள்ள கை, கால் மூட்டுகளில்
பூசிவர மூட்டுவலி முற்றிலும் குணமாகும். சுக்கைத் தூள் செய்து, எலுமிச்சை
சாறுடன் கலந்து குடித்தால் பித்தம்
விலகும். சுக்கு, மிளகு, தனியா,
திப்பிலி, சித்தரத்தை இவ்வைந்தையும் இட்டு கஷாயம் செய்து
பருகிவர, கடுஞ்சளி மூன்றே நாட்களில் குணமாகும்.சிறிது சுக்குடன், ஒரு
வெற்றிலையை மென்று தின்றால், வாயுத்தொல்லை
நீங்கும். சுக்கு, வேப்பம்பட்டை போட்டு
கஷாயம் செய்து குடித்துவர, ஆரம்பநிலை
வாதம் குணமாகும். சுக்குடன் சிறிது நீர் தெளித்து,
விழுதாக அரைத்து, நெற்றியில் தடவினால் தலைவலி வந்தவழியே போய்விடும்.சுக்கு, கருப்பட்டி, மிளகு
சேர்த்து, "சுக்கு நீர்" காய்ச்சிக்
குடித்து வர உடல் அசதி,
சோர்வு நீங்கி சுறுசுறுப்பு ஏற்படும்.
சுக்குடன்,
தனியா வைத்து சிறிது நீர்
தெளித்து, மைய்யாக அரைத்து உண்டால்,
அதிக மது அருந்திய போதை
தீர்ந்து இயல்பு நிலை ஏற்படும்.
சுக்கோடு சிறிது வெந்தயம் சேர்த்துப்
பொடியாக்கி, தேனில் கலந்து சாப்பிட்டால்,
அலர்ஜி தொல்லை அகலும்.சுக்கு,
மிளகு, சீரகம், பூண்டு சேர்த்து
கஷாயம் செய்து காலை, மாலை
குடித்துவர மாந்தம் குணமாகும். சுக்குடன்,
சிறிது துளசி இலையை மென்று
தின்றால், தொடர் வாந்தி, குமட்டல்
நிற்கும்.
சுக்குடன்,
மிளகு, சுண்ணாம்பு சேர்த்து மைய்யாக அரைத்துப் பூசிவர,
தொண்டைக் கட்டு மாறும். குரல்
இயல்பு நிலைபெறும்.சிறிது சுக்குடன், சின்ன
வெங்காயத்தை வைத்து அரைத்துச் சாப்பிட்டால்,
மலக்குடலில் உள்ள தீமை தரும்
கிருமிகள் அழியும். சுக்குடன், கொத்தமல்லி இட்டு கஷாயம் செய்து
பருகினால் மூலநோய் தீரும். சுக்கு,
ஐந்து மிளகு, ஒரு வெற்றிலை
சேர்த்து மென்று தின்று, ஒரு
தம்ளர் நீர் குடித்தால் தேள்,
பூரான் கடி விஷம் முறியும்.சுக்கு, அதிமதுரம் இரண்டையும்
தூள் செய்து, தேனில் கலந்து
சாப்பிட்டுவர குற்றிருமல் குணமாகும். தயிர்சாதத்துடன், சிறிது சுக்குப்பொடி இட்டு
சாப்பிட்டால், வயிற்றுப்புண் ஆறும். சுக்கு , மிளகு,
பூண்டு, வேப்பிலை இவைகளைச் சேர்த்து கஷாயம் செய்து, தினம்
மூன்று வேளை வீதம் இரண்டு
நாட்கள் குடித்துவர விஷக்காய்ச்சல் குறையும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக