வியாழன், 27 ஜூன், 2013

படித்த பழமொழிகள்..

ஒருவர் உன்னை தாழ்த்தி பேசும் போது ஊமையாய் இரு
புகழ்ந்து பேசும் போது செவிடனாய் இரு. எளிதில் வெற்றி பெறுவாய்.

அன்பு காட்டி சிலரும் காயப்படுத்தியே சிலரும் மனதில் நீங்கா இடம் பிடித்து விடுகிறார்கள்.இரு வித மனிதர்களையும் மறக்கவே முடிவதில்லை.

கோபமாய் பேசினால் குணத்தை இழப்பாய்
வேகமாய் பேசினால் அர்த்தத்தை இழப்பாய்
வெட்டியாய் பேசினால் வேலையை இழப்பாய்
அதிகமாய் பேசினால் அமைதியை இழப்பாய்
ஆணவமாய் பேசினால் அன்பை இழப்பாய்
சிந்தித்து பேசினால் சிறப்போடு வாழ்வாய்…

உன் கைரேகையை பார்த்து உன் எதிர்காலத்தை நம்பி விடாதே
ஏனென்றால் கை இல்லாதவனுக்கும் எதிர்காலம் உண்டு 

அவமானத்தை தாங்கிக்கொள்ளும் திடமனம் இல்லை என்றால் 
கடமையை நிறைவேற்ற முடியாது.

உன் வேதனை பலரை சிரிக்க வைக்கலாம் - ஆனால் 
உன் சிரிப்பு ஒருவரை கூட வேதனைப்படுத்த கூடாது.


நான் வீழ்ந்து விட்டேன் என்று எண்ணி
யாரும் கை தட்டி சிரித்து விடாதீர்கள்
நான் வீழ்ந்ததே முளைப்பதற்கு தான் 

நாம் சொன்ன ஒரு பொய் உலகத்திற்கு தெரியும் போது 
நாம் சொன்ன அத்தனை உண்மைகளும் சந்தேகத்திற்கு இடமாகின்றன. 

கல் மீது விழும் ஒவ்வொரு அடியும் 
கல்லை சிற்பமாக்குகிறது. 


வாழ்வில் தோல்வி அதிகம், வெற்றி குறைவு என வருந்தாதே.செடியில் இலைகள் அதிகம் என்றாலும் அதில் பூக்கும் மலருக்கே மதிப்பு அதிகம்.

எல்லாத் துன்பங்களுக்கும் இரு மருந்துகள் உள்ளன.ஒன்று காலம், இன்னொன்று மெளனம்.

நல்ல முடிவுகள் அனுபவத்திலிருந்து பிறக்கின்றன 
ஆனால் அனுபவமோ தவறான முடிவுகளிலிருந்து கிடைக்கிறது. 

வெற்றி என்பது நிரந்தரமல்ல 
தோல்வி என்பது இறுதியானதுமல்ல! 

புத்தகம் சேமித்து பயனில்லை 
புத்தகத்திலுள்ளவை புத்தியில் சேமிக்கப்பட வேண்டும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக