வெள்ளி, 14 செப்டம்பர், 2012

பொண் மொழிகள்


·  பிள்ளைகளுக்காக வாழ்வதாக கூறி சொத்திற்காக உழைப்பவர்கள்
பிள்ளைக்கு கல்வியே சொத்து என்பதை மறந்து போய் விடுகின்றனர்.

·  அதிகம் சொல்ல விரும்புபவன் குறைவான வார்த்தைகளையே பயன்படுத்துவான்.
·  கடமையை ஒழுங்காய் செய்தாலே கடவுளைக் காணலாம்.
·  திட்டமில்லாத செயல் யாவும் நஷ்டமே.
·  பிறரிடம் அன்பு செலுத்தி உங்களை துய்மைப்படுத்திக் கொள்ளுங்கள்.
·  பக்தி மிகுதியாவதற்குத் தியானம் அதிகம் செய்ய வேண்டும்.
·  கடமையை முன்னிட்டு செய்த செயலுக்கு வெகுமதி எதிர்பாக்கக் கூடாது
·  நல்ல நம்பிக்கையில் உருவாகும் கருத்துக்கு என்றும் அழிவில்லை
·  பயப்படுத்துபவனும், பயத்தை போக்குபவனும் இறைவனே
·  முன்னேற்றம் என்பது நமது கைகளில்தான் இருக்கிற‌து
·  சிக்கனமில்லாமல் வாழ்ந்தால் சிறு குடும்பமும் சீரழிந்துவிடும்
·  மரமானது அதன் கனியைக் கொன்டு அறியப்படுகிறது
·  மகிழ்ச்சியும் உழைப்பும் வாழ்நாளை வளர்ப்பன‌
·  அடக்கம் தான் வெற்றிக்குச் சாவி
·  கற்றவன் அதை விட்டுவிடக் கஷ்டப்படுவான்
·  அனுபவம் ஒரு கடுமையான ஆசிரியர்
·  விடாமுயற்சியுடையவன் தான் விரும்பிய அனைத்தையும் பெற்றுவிடுகிறான்
·  எதிர்காலத்தை எண்ணி அஞ்சாதவனே நிகழ்காலத்தை நுகரலாம்
·  ஒரு நல்ல காரியத்தில் எப்போதும் உற்சாகத்துடன் ஈடுபட்டிருப்பது நல்லது
·  நம்பிக்கைதான் சாதனைக்கு அடிப்படை
·  பாதையை சரியாய் போட்டால் பயணம் சுபமாக இருக்கும்
·  பேசிய பிறகு வருந்துவதைவிட, பேசுவதற்க்கு முன்பே யோசனை செய்.
·  நண்பர்களைப் போலவே தேர்ந்தெடுத்த சில நூல்களே தேவை.
·  உடலுக்கு ஏற்படும் நன்மை, தீமை ஆத்மாவிற்குக் கிடையாது.
·  வாழ்க்கையின் உயர்வு உன் நாக்கின் நுனியில் இருக்கிற‌து.
·  சிக்க‌ன‌ம்தான் பெரிய‌ வ‌ருமான‌மாகும்.
·  அமைதியில்தான் உய‌ர்வும் உண‌ர்வும் உள்ள‌து.
·  த‌ன்னைத்தானே த‌ழ்த்திக்கொள்வ‌து மோச‌மான‌ ஒரு நோய்.
·  எல்லை மீறி சிரிப்பவன் மூடன், சிரிக்காமல் இருப்பவன் வஞ்ச‌கன்.
·  நல்ல காரியங்களை ஒருநாள் கூட தாமதித்துச் செய்யாதே.
·  ந‌ல்ல‌ புத்த‌க‌ங்க‌ளை வாசியுங்க‌ள்.உறுதியைப் போல‌ உழைப்பும் இருந்தால் வெற்றி காண்பாய்.
·  புனித‌மான‌ செய‌ல்க‌ளில் வாழ்வ‌துதான் புக‌ழ் என‌ப்ப‌டும்.
·  உய‌ர்வு என்ப‌து ஊக்க‌த்தின் அள‌வைப் பொறுத்த‌தே ஆகும்.
·  கடின உழைப்பு தெய்வ வழிபாட்டுக்குச் சமம்.
·  அபாயம் என்ப‌து, அபார‌ மூளைக‌ள் அவ‌ச‌ர‌த்தில் செய்வ‌து.
·  நன்றாகச் சிரித்தால் வீட்டில் ஒளி பரவும்.
·  க‌ட‌மை உண‌ர்வே உன் நேர்மையான‌ வாழ்க்கைக்கு சூத்திர‌ம்.
·  பண்பாடு குன்றிய இடத்தில்தான் பகைமையுணர்ச்சி அதிகம் காணப்படும்.
·  ம‌னோ தைரிய‌ம் இல்லையேல் வாய்மை இல்லை.
·  ஒவ்வொரு துன்பமும் நமக்கு ஒரு வழிகாட்டி.
·  உண்மையை நம்புவது பக்தி.உண்மையை அறிவ‌து ஞானம்.
·  அதிகம் பேசுபவர்கள் எப்போதும் பெரும் அறிவாளிகளாய் இருப்பதில்லை.
·  க‌ல்வியும் அறிவும் சிற்ந்த‌ ந‌ண்ப‌ர்க‌ள்.
·  உன் பேச்சு உன் புத்தி கூர்மையை பிர‌திப‌லிக்கும்.
·  முன்பின் அறியாத‌ வ‌ழிக‌ளில் ஒருவ‌னாக‌ப் போக‌க்கூடாது.
·  துன்பம் வந்தபோது அழுகிறவர்கள் அடிமைகளாவர்.
·  குறி வைத்தால் ம‌ட்டும் போதாது, அடிக்க‌வும் வேண்டும்.
·  உற்சாக‌மும், முய‌ற்சியும் உள்ள‌வ‌னுக்கு எங்கும் வேலை கிடைக்கும்.
·  வாழ்வது முக்கியமல்ல, சிறப்பாக வாழ வேண்டும்.
·  தானம் எவனையும் வறியவன் ஆக்கியதில்லை.
·  நாணயமாக நடப்பவர்கள், ஒளிக்கும் அஞ்சுவதில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக